Copy Imageவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே!
Subramaniya Bharathiyar
-
-
Copy Image
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிடபக்க மலைகள் உடைந்து-வெள்ளம்பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிடதக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டுதக்கை யடிக்குது காற்று-தக்கத்தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிடவெட்டி யடிக்குது மின்னல்,-கடல்வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;கொட்டி யிடிக்குது மேகம்;-கூகூவென்று விண்ணைக் குடையுது காற்று;சட்டச்சட சட்டச்சட டட்டா-என்றுதாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;எட்டுத் திசையும் இடிய-மழைஎங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!அண்டம் குலுங்குது,தம்பி!-தலைஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசைவெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்செண்டு புடைத்திடு கின்றார்;-என்னதெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!